தமிழினத்தின் உரிமைப் போராளியாகவே வாழ்ந்தார்!

Date:

தமிழ் இனத்தின் உரிமைப் போராளியாகவே வாழ்ந்த அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு எம் இனத்திற்கே பேரிழப்பு என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை மதத்தலைவர் என்பதைக் கடந்து எமது இனத்தின் உரிமைகளுக்காக துணிச்சலோடு முன்நின்று செயற்பட்ட பெரியவர்.

கடந்த காலங்களில் எமது இனத்தின் உரிமைக்கான போராட்டங்கள் பலவற்றில் ஆண்டகையோடு இணைந்து பங்குபற்றியமையை எண்ணி பெருமையடைகின்றேன். எந்நேரமும் மக்களுக்காகவே வாழ்ந்த ஆண்டகையின் மறைவு கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமின்றி தமிழ் மக்கள் அனைவருக்குமே பேரிழப்பாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்