நேற்று 264 தொற்றாளர்கள்!

Date:

நேற்று (31) நாட்டில்  264 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதை தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 92,706 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 238 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து ஆறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,910 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அண்மையில் நாட்டுக்கு வந்த 20 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது 2,887 நபர்கள் நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 161 பேர் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,251 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 353 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்