31.3 C
Jaffna
March 28, 2024
கிழக்கு

மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!

எரிபொருள் நிரப்பி விட்டு கடைமுன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் மட்டக்களப்பு போரதீவில் இடம் பெற்றுள்ளது.

வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டியே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு அருகில் உள்ள கடைக்கு முன்னால் நிறுத்திய வேளை திடீரென முச்சக்கரவண்டி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை கண்ட கடை உரிமையாளர், அயலவர்கள் முச்சக்கர வண்டி சாரதியை வெளியேறுமாறு கூறி தீயை துரிதமாக செயற்பட்டு அணைத்துள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment