புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்ல வாகனம் கழுவியவர் மின்சாரம் தாக்கி பலி!

Date:

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் இன்று (28) அதிகாலை 7.30 மணி அளவில்வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவி கொண்டிருந்த வேளையில் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மின்ஒழுக்கினால் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்ற நபர் மரணமடைந்துள்ளார்.

முறையற்ற வகையில் சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு மின் இணைப்பு வழங்கியதனால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது குடும்பத்தோடு புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குதி உத்திர பொங்கலிற்கு செல்வதற்காகவே இவர் வாகனத்தை கழுவியுள்ளார்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம்...

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்