சிறிதரன் எம்.பி வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள் உடைப்பு: 4 பேருக்கு ஏற்பட்ட கதி!

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வீட்டு வாசலில் அவரது மகனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்த 4 பேரை, யாழ்ப்பாண பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையாக உள்ள சி.சிறிதரன் எம்.பியின் வீட்டுக்குள் நுழைந்ததுடன், வாசலில் நின்ற மோட்டார் சைக்கிளையும் உடைத்தனர்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட முறுகல், இந்த மோதலாக வளர்ந்திருந்தது. 2020/ 2021 ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களிற்கிடையிலான மோதல் சம்பவமே இது.

இதை தொடர்ந்து, தாக்குதலுடன் தொடர்புடைய கொக்குவில். திருநெல்வேலி. சுன்னாகம் பகுதியை சேர்ந்த நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” – திருமாவளவன் திடீர் அறிவிப்பு

“எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என விசிக தலைவர்...

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் இன்றும் தொடரும்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை...

வவுனியாவில் கஞ்சாவுடன் 2 பொலிஸ்காரர்கள் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்