கறுவா சிகரெட்டை அறிமுகப்படுத்தியமை தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக சிங்கள அமைப்பொன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளிக்கவுள்ளது.
அமைச்சர் வீரவன்ச மற்றும் பலர் புகையிலை மற்றும் அல்கஹோல் தொடர்பான தேசிய அதிகாரத்தை மீறியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
விமல் வீரவன்ச கறுவா சிகரெட்டை அறிமுகப்படுத்திய நிகழ்வில், சட்டத்தின் பல விதிகள் மீறப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, சட்டத்தரணிகளின் ஆலோசனையின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு அளிக்கப்படும்.
இன்று காலை இந்த முறைப்பாடு அளிக்கப்படவுள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்கவும், அவர்கள் சட்டத்தை மீறியது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அழைப்பும் விடுத்துள்ளது.



