கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வாராய்ச்சி பணிகள் இன்று (23) ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே அந்த பகுதி துப்பரவ செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் தமிழ் பௌத்தம் என்ற ஒன்றே இருந்ததை அறியாமல், தமிழர் தாயக பகுதிகளில் உள்ள பௌத்த அடையாளங்களையும் சிங்களவர்களின் வரலாற்றுடன் இணைப்பதில் தொல்லியல் திணைக்களம் தீவிரம் காட்டி வருவதால், உருத்திரபுரம் சிவன் ஆலய அகழ்வாராய்ச்சியும் வரலாற்று திரிபு முயற்சியென குறிப்பிட்டு, அகழ்வாராய்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய வளாகத்தில் நேற்று முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1