இன்று பசறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 33 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஐந்து குழந்தைகள் உட்பட மேலும் 33 பேர், பசறை மற்றும் பதுளை வைத்தியாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் ஒன்பது ஆண்களும், ஆறு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி உயிரிழந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் தற்போது கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது.
லுணுகலையில் வசிக்கும் 53 வயதானவரே சாரதி.




