மஸ்கெலியா பிரதேச சபைக்குறிப்பிட்ட மஸ்கெலியா பொது மயான பூமி வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா நகர பொது மயானம் பகுதி தற்போது தனியார் தேயிலை தோட்டத்தின் பாவனையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியிலுள்ள கருப்பன் தேயிலை மரங்களை வெட்டுவதாகவும் அவற்றை பாரவூர்திகளில் அப்பகுதியிலுள்ள கொங்றீட் பாதையூடாக கொண்டு செல்வதனால் பாதை சேதமடைவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
மஸ்கெலியா நகர பொது மயானத்தை பாதுகாத்தல் தொடர்பில் மஸ்கெலிய பிரதேசசபை, மஸ்கெலியா மரண ஆதார சங்கம் மற்றும் மஸ்கெலியா வாழ் பொது மக்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.




