இலங்கையில் நேற்று (16) மேலும் 286 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, தொற்றாளர்களின் எண்ணிக்கை 88,524 ஆக உயர்ந்துள்ளது.
பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 250 பேர் அடையாளம் காணப்பட்டனர், சிறைகளில் இருந்து 24 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்த 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று, 402 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,371 ஆக உயர்ந்தது.
தற்போது 2,619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் 423 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1