1000 ரூபா வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்!

Date:

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டுமென கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தன தோட்ட நிறுவனம், எல்பிட்டிய தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 20 பெருந்தோட்ட நிறுவனங்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் பெருமளவில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறன, தோட்டத் தொழிலாளர்களின் ஊதியங்கள் திடீரென அதிகரிப்பது தம்மை நெருக்கடிக்குள்ளாக்குகிறது என்றும், தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அரசின் முடிவு சட்டவிரோதமானது என்றும் மனுதாரர் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த நிறுவனங்கள் சார்பில் சனத் விஜேவர்தன மனுவை தாக்கல் செய்தார்.

தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு பெரும் வரி செலுத்த வேண்டும் என்றும், இந்த ஊதிய உயர்வு நிறுவனங்களைநெருக்கடியில் ஆழ்த்தக்கூடும் என்றும், அரசாங்கத்தின் இந்த திடீர் சட்டவிரோத முடிவால் தோட்டத் தொழில் நெருக்கடியில் இருக்கக்கூடும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டுகிறார். இதனால், அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்கும்படி கோரியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மனைவியை குத்திக் கொன்ற கணவன்

கூர்மையான ஆயுதத்தால் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி...

‘ஹிட்லர் அன்று சொன்னது சரிதான்’… இலங்கை தனியார் பேருந்து சங்க தலைவர்!

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களால் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை...

ஈரான் போரால் அதிகரிக்கும் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம்: அமெரிக்கா

அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளைக் குறைப்பதையும், ஈரானுடனான அதிகரித்து வரும் போரினால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்