படகில் கனடா செல்ல முயன்றவர்கள் சிக்கினர்!

Date:

கடல்வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற ஒரு குழு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் நேற்று அதிகாலை கடற்படையினரால்  24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரக்கன்ஹேனவின் கற்பிட்டி குளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றை கடற்படையினர் சோதனை செய்தனர். இதன்போது லொறி சாரதி உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் படகில் கனடாவிற்கு செல்ல முயற்சித்தது விசாரணையில் தெரிய வந்தது.

இருபது ஆண்கள், ஒரு பெண்மணி, இரண்டு யுவதிகள், ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர். இவர்களில், ஒன்பது பேர் மட்டக்களப்பையும், ஆறு பேர் யாழ்ப்பாணத்தையும், ஐந்து பேர் முல்லைடித்தீவையும், மூன்று பேர் திருகோணமலையையும், ஏனையவர்கள் புத்தளத்தையும் சேர்ந்தவர்கள்.

இவர்களை கடத்த முயன்ற நபரும் இந்தக் குழுவில் இருப்பதாக கடற்படை சந்தேகிக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களும், லொறியும் கல்பிட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கூட்டாளியின் புதுப்புது கண்டுபிடிப்புக்கள்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்