சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை இராணுவத்தினர் சங்குப்பிட்டி- பூநகரி வீதித் தடையையில் புதன்கிழமை (03) கைப்பற்றியுள்ளனர்.
வெண் சந்தனம் மற்றும் பாலை மரக்குற்றிகளுடன் பயணித்த கப் ரக வாகனம் இராணுவத்தின் வீதித் தடையில் நிறுத்தாமல் சென்றது. அதை இராணுவத்தினர் மடக்கிப் பிடித்தனர்.
எனினும், சந்தேக நபர்கள் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.