வடமாகாணத்தில் 44,245 பரீட்சார்த்திகள்!

Date:

வடக்குமாகாணத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு 44 ஆயிரத்து 245 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

இவர்களில் 23 ஆயிரத்து 679 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 20 ஆயிரத்து 566 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடக்குகின்றனர்.

அந்த வகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 352 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 11 ஆயிரத்து 130 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 22 ஆயிரத்து 482 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 392 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 ஆயிரத்து 74 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 5 ஆயிரத்து 466 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 919 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், ஆயிரத்து 855 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 4 ஆயிரத்து 774 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

அத்தோடு வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 771 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 ஆயிரத்து 860 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 6 ஆயிரத்து 631 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 245 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2 ஆயிரத்து 647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 4 ஆயிரத்து 892 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்