வடமராட்சி தனியார் வைத்தியசாலை மருத்துவ பணியாளருக்கு கொரோனா!

Date:

வடமராட்சியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

இன்று வடக்கில் மேற்கொள்ளப்பட்ட கொரொனா பரிசோதனையில் வடக்கில் 7 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 659 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் 5 பேர், வவுனியா மாவடத்தில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர் நவாலி பகுதியை சேர்ந்தவர். அவர் வடமராட்சி, நெல்லியடி ரூபின்ஸ் தனியார் வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணியாற்றி வருகிறார்.

அவரது மனைவி சண்டிலிப்பாய் பகுதியில் பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்