விவாகரத்து வழக்கில் விபரீதம்: நீதிமன்ற வாயிலில் பெண், மருமகனிற்கு கத்திக்குத்து!

Date:

கெஸ்பெவ நீதிமன்றத்தின் முன் ஒரு பெண் உட்பட இருவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று (25) நடந்தது.

படுகாயமடைந்த இருவரும் பிலியந்தல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

60 வயதான சந்தேகநபர் அந்த பெண்ணிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். நீதமன்ற உத்தரவுப்படி தாபரிப்பு பணம் வழங்கி வந்தவர், கடந்த 3 மாதங்களாக அதை வழங்கவில்லை. இது தொடர்பில் இன்று அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்றத்தின் முன்பாக வைத்து அந்த பெண்ணின் தலை, உடலில் கூரிய கத்தியினால் குத்தியுள்ளார். பெண்ணை காப்பாற்ற முயன்ற அவரது மருமகனும் கத்திக்குத்திற்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

சந்தேக நபரை கத்தியுடன் நீதிமன்றத்தின் முன் பொலிசார் கைது செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

‘எங்கள் மகளை கணவர் குடும்பம் அடித்துக் கொன்றுவிட்டது’; பெற்றோர் குற்றச்சாட்டு: கண்டியில் அதிர்ச்சி சம்பவம்!

கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உயிரிழந்த இளம்...

தவெகவில் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஐக்கியம்

நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கோமதி உள்ளிட்டோர்...

ஆஸ்திரேலியாவில் முதல் H5N1 பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி; வைரஸை கட்டுப்படுத்த அரசு உறுதி

ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆந்தனி அல்பனீஸ் சனிக்கிழமை தெரிவித்ததாவது, நாட்டில் H5N1 பறவைக்காய்ச்சல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்