சசிகலாவை சந்தித்த சரத்குமார், ராதிகா!

Date:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார் சரத்குமார். பின்னர், ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் இன்று (24) கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா. அவரது வீட்டுக்குச் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார், அவரின் மனைவி ராதிகா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

அதன் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

”சசிகலாவின் உடல் நலனை விசாரிப்பதற்காக இங்கு வந்துள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ள அவரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வந்தோம். ஏற்கெனவே அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தபோது தொலைபேசி மூலமாகப் பேசினேன். கடந்த 10 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நாங்கள் ஜெயலலிதாவைச் சந்திக்கும் போதெல்லாம் சசிகலா உடன் இருந்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற எண்ணத்தின் அடிப்படையில், நாங்கள் பயணித்த காலங்களை நினைவுகூறி சசிகலாவுடன் பேசிக் கொண்டிருந்தோம். மீண்டும் அவர் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தேன். நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல இருந்திருக்கிறோம். அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் தெரியும். உடல்நலம் மற்றும் மரியாதை நிமித்தமாகவே சசிகலாவைச் சந்தித்துள்ளேன்.”

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

ராதிகா சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”சசிகலாவை ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாகத்தான் எனக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...

அம்பாறை பிசியோதெரப்பிஸ்ட் மரணம் I நான் அவனில்லை பாணியில் பல பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி; 3 குழந்தைகள்… வழுக்கைத் தலைக்கு ‘விக்’!

தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகே காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை...

குழந்தையை காருக்குள் விட்டுவிட்டு மறந்துபோய் வேலைக்கு சென்ற தமிழ்ப்பெண்; குழந்தை பலி: ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

ஜேர்மனியின் ஷோர்ன்டார்ஃபில் (ரெம்ஸ்-மர் மாவட்டம்) புதன்கிழமை அன்று ஒரு காரில் சடலமாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்