உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்: மைத்திரி மீது குற்றவியல் வழக்கிற்கு பரிந்துரை!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை நேற்று (22) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகவினால் 2019, செப்ரெம்பர், 21ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஜனக டி சில்வா தலைமையிலான 5 பேர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது, கடமை தவறிய குற்றச்சாட்டில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யலாமா என்பதை ஆராய, அறிக்கையை உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்புமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

மட்டக்களப்பு நீதிமன்றிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 13 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்ற 3 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்