பேஸ்புக் ஆஸ்திரேலிய அரசுயை மிரட்டுகிறதா?

Date:

செய்தி நிறுவனங்கள் பெரிதாக வருவாய் இல்லாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், அவற்றிடம் இருந்து இந்த டெக் நிறுவனங்கள் செய்திகளைப் பெற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் வரும் விளம்பர வருவாய்களையும் பெற்றுக் கொள்கின்றன. ஆனால், செய்தி நிறுவனங்களுக்கு ஒரு பங்கு பணம்கூடத் தருவதில்லை என பிரபல ஆஸ்திரேலிய மீடியா நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றன. இதைத் தீர்ப்பதற்காக ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்திருக்கிறது. அதை அமலுக்குக் கொண்டு வரவும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆனால், இதற்கு முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த கூகுள் தற்போது பணிந்துவிட, பேஸ்புக்கோ ஆஸ்திரேலிய அரசையே மிரட்டும் வகையில் முரண்டுபிடித்துவருகிறது.

குக்கும், மற்றும் செய்தி நிறுவனங்களுக்குமான பனிப்போர் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த பல மாதங்களாகவே நீடித்துவரும் இப்பிரச்னை, கடந்த சில நாட்களாக இரண்டு தரப்புமே முரண்டுபிடிப்பதால் உச்சம் தொட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே, சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. பல நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனங்களும், பேஸ்புக்கில் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றன. ஆனால், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற இணையதளங்கள் எந்தவித கட்டணமும் இன்றி செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பெற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் வரும் விளம்பர வருமானங்களையும் அந்த நிறுவனங்களே அபகரித்துக் கொள்கின்றன. என ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் குற்றம் சாட்டியதில் இருந்துதான் பிரச்னையே ஆரம்பமானது.

செய்தி நிறுவனங்கள் பெரிதாக வருவாய் இல்லாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், அவற்றிடம் இருந்து இந்த டெக் நிறுவனங்கள் செய்திகளைப் பெற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் வரும் விளம்பர வருவாய்களையும் பெற்றுக் கொள்கின்றன. ஆனால், செய்தி நிறுவனங்களுக்கு ஒரு பங்கு பணம்கூடத் தருவதில்லை என பிரபல ஆஸ்திரேலிய மீடியா நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றன. இதைத் தீர்ப்பதற்காக ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்திருக்கிறது. அதை அமலுக்குக் கொண்டு வரவும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆனால், இதற்கு முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த கூகுள் தற்போது பணிந்துவிட, பேஸ்புக்கோ ஆஸ்திரேலிய அரசையே மிரட்டும் வகையில் முரண்டுபிடித்துவருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புதுச்சேரி உள்விவகாரங்களில் தலையிட்டாரா இலங்கைத் தூதரக அதிகாரி?

புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதித்...

யாழில் சைவசித்தாந்த பட்டப்படிப்புகளை ஆரம்பிக்கும் தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து...

கொத்துப் போட பிந்தியதால் உணவக ஊழியர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்