27.4 C
Jaffna
April 9, 2025
Pagetamil
இலங்கை

ரி 56 துப்பாக்கி தோட்டாவுடன் பொலிஸ் அதிகாரி கைது!

ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 15 தன் வசம் வைத்திருந்த பொலிஸ் அதிகாரியொருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது இன்று (19) விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கான சிறப்பு ஒத்திகை திட்டம் கட்டூநாயக்க விமான நிலையத்தில் நடந்து வரும் போது இந்த சம்பவம் நடந்தது.

சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் பணியகத்துடன் இணைக்கப்பட்ட துணை ஆய்வாளர் ஆவார்.

தோட்டாக்களுடன் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 01 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கதுட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!