முதல்நாள் பாடசாலை சென்ற இரட்டையர்கள்: வழியிலேயே ஒருவரை கொன்ற பாரவூர்தி!

Date:

பதுளை பெற்றோர் நிரப்பு நிலையத்தின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் 6 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தரம் 1 மாணவர்கள் பாடசாலைகளில் இன்று இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். தனது வாழ்க்கையில் முதன்முறையாக இன்று பாடசாலைக்கு அடியெடுத்து வைக்கும் கனவுடன் சென்ற மாணவனொருவனே பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இன்று (15) காலை 7.20 மணியளவில் பதுளை பெட்ரோல் நிலையம் முன் பாரவூர்தி மோதி மாணவன் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்யாலயாவின் முதல் வகுப்பு மாணவரான, அசெலபுரவில் வசிப்பவரான சிவனேசன் வருண் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரட்டையர்களான இரண்டு மாணவர்கள் இன்று முதல்நாள் பாடசாலையில் இணைக்கப்படவிருந்தனர். அவர்களை பாட்டி பாடசாலைக்கு அழைத்து சென்றார். இதன்போது இந்த விபத்து நேர்ந்தது. விபத்தில் பாட்டியும் பலத்த காயமடைந்தார். இரட்டையரான மற்ற மாணவன் அதிரஷ்டவசமாக காயங்களின்றி தப்பித்தார்.

பாட்டி பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

spot_imgspot_img

More like this
Related

‘எங்கள் மகளை கணவர் குடும்பம் அடித்துக் கொன்றுவிட்டது’; பெற்றோர் குற்றச்சாட்டு: கண்டியில் அதிர்ச்சி சம்பவம்!

கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து உயிரிழந்த இளம்...

தவெகவில் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஐக்கியம்

நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கோமதி உள்ளிட்டோர்...

**ஆஸ்திரேலியாவில் முதல் H5N1 பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி; வைரஸை கட்டுப்படுத்த அரசு உறுதி**

ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆந்தனி அல்பனீஸ் சனிக்கிழமை தெரிவித்ததாவது, நாட்டில் H5N1 பறவைக்காய்ச்சல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்