30.7 C
Jaffna
March 29, 2024
உலகம்

காதலர் தினத்தில் யானை மீது அமர்ந்து திருமணம் செய்த 52 ஜோடிகள்!

தாய்லாந்தில் காதலர் தினத்தில் யானைகள் மீது அமர்ந்து ஊர்லமாக சென்றபடி, 52 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

சோன்பூரி மாகாணத்தில் உள்ள நூங் நூச் பூங்காவில் ஆண்டுதோறும் காதலர் தினத்தை முன்னிட்டு, யானைகள் மீது காதலர்கள் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வழக்கமாக 100 ஜோடிகள் ஒவ்வொரு வருடமும் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், இம்முறை கொரோனா கட்டுப்பாடுகளினால் 52 ஜோடிகளே இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

இன்று, நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிய கலைஞர்கள் நடனம், இசை வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, யானைகளின் மீது பயணித்தபடியே 52 காதல் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்கள் யானையில் இருந்தபடி திருமண பத்திரத்தில் கையெழுத்திட்டதை, உள்ளூர் நிர்வாக அதிகாரியொருவர் மேற்பார்வை செய்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment