தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் லெப் மாலதி அவர்களின் நினைவு தினம் இன்றைய தினம் கோப்பாயில் மாலதி வீரச்சாவை தழுவி கொண்ட இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது,
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாட்டு பொது கட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று மாலை கோப்பாயில் உள்ள அவரது நினைவுத்தூபியின் முன்றலில் பொது கட்டமைப்பு உறுப்பினர்களால் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை- விடுதலைப் புலிகள் போர் ஆரம்பித்த நாள் இன்றாகும்.




