கடந்த சில நாட்களாக பருத்தித்துறை கொட்டடி மீன் சந்தையில் அதிகளவான மக்கள் சமூக இடைவெளியை பொருட்படுத்தாது மீன் கொள்வதற்காக ஒன்று கூடுவதும் முகக்கவசம் இன்றி நடமாடுவதும் அவதானிக்கப்பட்டு வந்தது.
இதனால் தொற்று பரவும் அபாயமும் காணபட்ட்துஎனவே பொதுமக்கள் கூடும் இடங்களில் தொற்று ஏற்படுகின்றதா என்பதை பரிசோதிப்பதற்காக கொட்டடி மீன் சந்தையை இலக்கு வைத்து எழுமாற்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 162 பேர் பங்கு கொண்டனர். இந்த பரிசோதனைகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் வேலைகளில் கற்கோவளம் இராணுவத்தினரும், பருத்துறை பொலிஸாரும் ஈடுபட்டனர்.
தொடர்ந்தும் இவ்வாறு பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து எழுமாறான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திட்டமிட்டுள்ளது.




