அடுத்தடுத்து நாவல்களை படமாக்கி வரும் வெற்றிமாறன்.. அடுத்த நாவல் யாருடையது தெரியுமா !

Date:

நாவல்கள் மற்றும் சிறுகதையை மையமாக வைத்து தனது படங்களை இயக்குனர் வெற்றிமாறன் எடுத்து வெற்றிப்பெற்று வருகிறார்.

தமிழ் திரையுலகில் சில படங்களே இயக்கினாலும் வெற்றி இயக்குனராக சாதனை படைத்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷின் ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றிப் பெற்றுள்ளார். இவர் இயக்கிய ஐந்து படங்களும் சூப்பர் ஹிட்டடித்துள்ளன.

சமீபகாலமாக அவர் இயக்கி வரும் திரைப்படங்கள் நாவல்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவான ‘அசுரன்’ திரைப்படம் பூமணி எழுதிய வெட்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து தற்போது சூரி வைத்து இயக்கி வரும் விடுதலை திரைப்படமும் பல ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் ‘விடுதலை’ படத்தை முடித்து சூர்யா வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் கதை சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் கதைக்கருவாக ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் அதன் பின்னணி இருக்கும் என கூறப்படுகிறது. இதேபோன்று தனது அடுத்த படங்களையும் நாவலில் வரும் கதைகளை வைத்தே எடுக்க திட்டமிட்டுள்ளராம் வெற்றிமாறன்.

spot_imgspot_img

More like this
Related

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு – பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய முன்னேற்றம்

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப்...

குரு-சந்திர சேர்க்கையால் உருவான சமசப்தக் யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும் செல்வமும் குவியுமா?

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜோதிட ரீதியாக பல சுப யோகங்கள் உருவாகி...

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்