செவ்வாய் கிரகத்தில் திக்கு தெரியாமல் தின்டாடிய நாசா ஹெலிகாப்டர்!

Date:

நாசாவின் ஆய்வு ஹெலிகாப்டரான இன்ஜெனிட்டி ஏப்ரல் மாதம் முதன் முதலாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பறந்து ஆய்வு நடத்தியது.

இந்த ஆண்டு துவக்கத்தில் செவ்வாய் கிரகத்தில் சென்று இறங்கிய நாசாவின் விண்கலத்தின் ஒரு பகுதியாக அனுப்பிவைக்கப்பட்ட இன்ஜெனிட்டி இதுவரை ஐந்து முறை செவ்வாய் கிரகத்தின் மீது பறந்து ஆய்வு நடத்தி படம்பிடித்திருக்கிறது.

கடந்த வாரம் சனிக்கிழமையன்று ஆறாவது முறையாக செவ்வாய் கிரகத்தின் மீது பறந்து சென்ற இன்ஜெனிட்டி ஹெலிகாப்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அதன் கேமரா 20 டிகிரி அளவுக்கு சாய்ந்தது, அதன் விளைவாக இதனை வழிநடத்தும் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டதாக இந்த தானியங்கி ஹெலிகாப்டரின் தலைமை விமானி ஹவர்ட் கிரிப்பின் தெரிவித்தார்.

ஹெலிகாப்டரில் இருந்த கேமராவின் கோணம் மாறியதன் காரணமாக இது ஏற்கனவே எடுத்த புகைப்படத்தை கொண்டு மீண்டும் ஆய்வு கூடம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

திரும்பி செல்லும் திக்கு தெரியாமல் செவ்வாய் கிரகத்தில் ஒரு நிமிட நேரம் திண்டாடிய ஹெலிகாப்டர், அதில் உள்ள அவசர கால மாற்று ஏற்பாட்டின் உதவியுடன் சிறிது நேரம் கழித்து தரையிறங்கியதாக வியாழனன்று நாசா தெரிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஆங் சான் சூ கீ வீட்டுக்காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

மியான்மரின் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி மைத்திரிக்கு முன்னரே தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே...

முக்கிய பல ஊழல் வழக்குகள் இந்த வருடம் விசாரிக்கப்படும்!

ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்