இரத்தினபுரி கனிய மண்ணில் தங்கத்துகள்கள் கண்டுபிடிப்பு!

Date:

இரத்தினக்கல் கனிய மண்களில் தங்கத் துகள்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி இரத்தினக்கல் கூட்டுத்தாபன காரியாலய அதிகாரிகள் இத்தகவல்களை தெரிவித்தனர்.

இரத்தினபுரியின் கிரியெல்லை மற்றும் `ஹெரனிவத்தை பிரதேசங்கள் இரத்தினக்கல் கனிய மண்களில் மேற்படி தங்கத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை சேகரிப்பதில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இரத்தினக்கல் தங்க ஆபரண சபைத் தலைவர் நேற்று தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் இரத்தினபுரி மாவட்டம் இரத்தினக் கற்களிற்கு பெயர் பெற்றுள்ளது. தற்போது கனிய மண்களில் தங்கம் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பிரதேசங்களில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடும் தொழிலாளர்கள், இரத்தினக்கல் அகழ்வின் பின்னர் ஒதுக்கப்படும் மணலில் தங்கத் துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் இப்பிரதேச மக்களிற்கு மேலதிக வருமானம் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்