25.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

முடிந்தால் அரசில் அதிருப்தியில்லாத வீடொன்றிலிருந்து ஒரு குவளை தண்ணீர் கொண்டு வாருங்கள்: அரசுக்கு சவால் விட்ட தேரர்!

எதிர்வரும் 31ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக எடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க மகாசங்கத்தினரின் கூட்டம் நடைபெறவுள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

யாரும் இறக்காத வீட்டில் இருந்து ஒரு மாம்பழம் தருமாறு கேட்ட புராணக் கதையை போல, முடிந்தால் இந்த அரசாங்கத்தால் ஏமாற்றமடையாத வீட்டில் இருந்து ஒரு குவளை தண்ணீர் கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்தார்.

கோத்தபாய ஜனாதிபதியாக செயற்பட்டாலும், அரசாங்க நிர்வாகத்தின் மேற்பார்வையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் எனவும், பசில் ராஜபக்ஷவுக்கு அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமெனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நாரஹேன்பிட்டி அபயாராமயவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொறுப்பதிகாரி கைது

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

Leave a Comment