3 வருடங்களின் பின் சீன சிறையிலிருந்து திரும்பும் 2 கனேடியர்கள்!

Date:

சீனாவில் 1000 நாள்களுக்கும் அதிகமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கனடியக் குடிமக்கள் இருவர் தற்போது கனடாவை நோக்கி விமானத்தில் பயணம் செய்வதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2018 இல் மைக்கல் கோவ்ரிக், மைக்கல் ஸ்பவொர் ஆகிய இருவரும் உளவுக்குற்றச்சாட்டின் பேரில் சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei யின் தலைமை நிதியதிகாரியான மெங் வான்ஷோ கனடாவில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னாள் அரசதந்திரியான கோவ்ரிக்கும் ஆலோசகரான ஸ்பவொரும், தகுந்த காரணமின்றிப் பழிவாங்கும் நோக்கில் சிறையிடப்படடதாகத் ட்ரூடோவின் நிர்வாகம் சீனாவைக் குற்றஞ்சாட்டியது.

இருப்பினும், பெய்ஜிங், அந்த இரு சம்பவங்களுக்கும் சம்பந்தமில்லை என வலியுறுத்தி வருகிறது.

கனடாவின் நட்புநாடுகள், பங்காளிகள் ஆகியவை தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அந்த இருவரையும் விடுவிக்க ஆதரவு வழங்கியதற்குத் ட்ரூடோ நன்றி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்