26.7 C
Jaffna
April 6, 2025
Pagetamil
இலங்கை

யாழில் அதிவேகத்தால் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார்.

ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

வயோதிபர் ஒருவர் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் திடீரென வீதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டுள்ளார். பின்னால் அதிவேகமாக சென்ற இளைஞன், வயோதிபரை மோதுவதை தவிர்க்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து வீதியோர வாய்க்கால் கட்டில் மோதினார்.

தலையில் பலத்த காயமடைந்த இளைஞன், அதிக இரத்தப் போக்கினால் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

மோடிக்கு உயரிய இலங்கை விருது!

Pagetamil

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த யுவதிக்கு வைத்தியரால் பாலியல் துன்புறுத்தல்

Pagetamil

வாய் திறக்கவே அச்சப்படும் யாழ் ஜேவிபி எம்.பிக்கள்… மட்டக்களப்பு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்: சாணக்கியன் எம்.பி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!