பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை : திருகோணமலையும் அடக்கம்

Date:

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்தினால் பாடசாலை மாணவர்கள் அவதானிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய காலநிலை காரணமாக மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கவனமாக செயல்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அறிவுறுத்தியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது, தற்போதைய சூழ்நிலை தொடர்பாக நாளைய தினம் (17) கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும், தேவையானால் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகள் மற்றும் வெளியில் நீண்ட நேரம் செயற்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் மத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகள் தற்போதைய நாட்களில் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றன. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் திருகோணமலை, கொழும்பு, காலி, இரத்தினபுரி, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிக வெப்பநிலை உடல் வெப்பநிலையை அதிகரித்து பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நீர் மற்றும் இயற்கை பானங்களை பருகுவது அவசியம் என சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்