இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Date:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பாதுகாப்பை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

முறையான பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் தனது பாதுகாப்புப் படையினர் 60 பேராகக் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான மூன்று தசாப்த கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியை வழிநடத்திய ஒரு நபராக பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, தனது பாதுகாப்பை தன்னிச்சையாகக் குறைத்ததன் மூலம் பிரதிவாதிகளால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோருகிறார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை மற்றும் பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்