24.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பாதுகாப்பை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

முறையான பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் தனது பாதுகாப்புப் படையினர் 60 பேராகக் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான மூன்று தசாப்த கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியை வழிநடத்திய ஒரு நபராக பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, தனது பாதுகாப்பை தன்னிச்சையாகக் குறைத்ததன் மூலம் பிரதிவாதிகளால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோருகிறார்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை மற்றும் பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

east tamil

கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!

east tamil

Leave a Comment