ஏறாவூரில் கிணற்றில் வீழ்ந்த இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

Date:

நேற்றைய தினம் (13.01.2025) ஏறாவூர் 2ம் பிரிவு மக்காமடி வீதியில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சோந்த முகமட் ஷரகீர் ஜப்பிரா எனப்படும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை தனது வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் விளையாடிக் கொண்டிருந்த போது, அதற்குள் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிணற்றின் அருகில் கதிரை வைக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தை அதில் ஏறி கிணற்றின் பாதையில் சென்று தவறி விழுந்ததுள்ளதாக அறியப்படுகிறது. மாலை 6.00 மணியளவில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடியபோது, கிணற்றில் குழந்தை வீழ்ந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு, அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், பெற்றோரின் கவனயீனத்தினால் ஏற்படுத்திய கோபமான துயரமாகவும், இது குறித்த பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...

போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் மற்றொரு சுற்று பேச்சுக்கு அமெரிக்கா, ஈரான் முயற்சி

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து,...

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்