கனடா தமிழர் தெருவிழாவில் குழப்பம்: தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் மீதும் பொருட்கள் வீச்சு!

Date:

கனடாவின் ரொரண்டொ நகரில் நடந்த தமிழர் தெருவிழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நிகழ்வில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் மீது சில பொருட்கள் வீசப்பட்டுள்ளன.

கனடாவில் நடத்தப்படும் தமிழர் தெருவிழா நிகழ்ச்சி ஏற்பாட்டு அமைப்பான கனடிய தமிழ் காங்கிரசுக்கும், பிறிதொரு அமைப்புக்குமிடையிலான முரண்பாடே இந்த குழுப்பத்தின் காரணம்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்பை பேணுவதாக குற்றம்சாட்டிய எதிர்ப்பாளர்கள், புலிக்கொடிகளையும் ஏந்தியபடி நிகழ்விடத்துக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இசை நிகழ்ச்சி நடந்த போது, மேடையில் பாடிக்கொண்டிருந்த தென்னிந்திய பிரபல திரைப்பட பாடகர் ஸ்ரீநிவாஸ் மீது சில பொருட்கள் வீசப்பட்டது.

இதையடுத்து இசை நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்பட்டது.

கனடிய தமிழ் காங்கிரசின் பாடை கட்டப்பட்டு பறை அடிக்கப்பட்டு, இறுதிச்சடங்கு செய்வதை போல எதிர்ப்பாளர்கள் பாவனை செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்