ஹிருணிகா வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு

Date:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு இதுவரையில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அவர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான  நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படாததால், அவரது கட்சிக்காரர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபர்மன் காசிம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

கல்கிசை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தனக்கு பிணை வழங்கிய நீதவான் உத்தரவு தொடர்பில் பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதாக மனுதாரர் ஹிஷாம் ஜமால்டீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மனுதாரர் சார்பில் சரவணன் நீலகண்டன் சட்ட நிறுவனத்தினால் அறிவுறுத்தப்பட்ட கமிந்து கருணாசேனவுடன் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன ஆஜரானார்.

spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

நாட்டின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் புரட்சிக்...

சீமானுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் சீர்வரிசையுடன் வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில்,...

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் கடற்படை தளபதி பலி?

ஈரானிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்