25.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சியில் ஆயுர் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு
நிலவுகின்றது என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு மருந்து்களை வெளியில்
பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைப்பதாகவும் பொருளாதார
நெருக்கடிக்காரணமாக பெரும்பாலான பொது மக்கள் மருந்து்களை கொள்வனவு செய்ய
முடியாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட வைத்தியர்களை தொடர்புகொண்டு வினவிய போது

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக 50 வீத மான மருந்துக்களுக்கு தட்டுப்பாடு
நிலவுகிறது எனவும் கொழும்பிலிருந்து தங்களுக்கு உரிய மருந்து
கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்த அவர்கள், இதன் காரணமாக மாதாந்தம்
தங்களிடம் சிகிச்சைக்காக வருகின்ற பொது மக்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொறுப்பதிகாரி கைது

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

Leave a Comment