26.6 C
Jaffna
March 16, 2025
Pagetamil
இலங்கை

பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு: ஒருவர் பலி!

அவிசாவளை மாதொல பிரதேசத்தில் பழைய இரும்புகளை சேகரிக்கும்  நிலையத்தில், செவ்வாய்க்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பில், மஸ்கெலியாவைச் சேர்ந்த 49 வயதான நபரொருவர் மரணமடைந்துள்ளார்.

அந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த அந்த நபர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றுமொரு நபருடன் இணைந்து பழைய இரும்புகளை சேகரித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மரணமடைந்தவரின் சடலம், அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணையாளர்கள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினர் ஸ்தலத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

5 மாகணங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Pagetamil

துணை இராணுவக்குழுவை இயக்கிய தேசபந்து தென்னக்கோன்!

Pagetamil

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்

Pagetamil

எம்.பி பதவியை துறந்தார் மு.காவின் நளீம்!

Pagetamil

விக்கி அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!