19 எம்.பிக்கள் தடுப்பூசியை பெற்றனர்: 3 எம்.பிக்கள் தவிர்த்துக் கொண்டனர்!

Date:

19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா-ஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை இராணுவ மருத்துவமனையில் போட்டுக் கொண்டார்கள்.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கோவிட் -19 தடுப்பூசியை பெற மறுத்துவிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கர, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தடுப்பூசி பெறுவதைத் தவிர்த்துக் கொண்டனர்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில், பொதுமக்களிடமிருந்து அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் இருந்து ஒரு நபருக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக தடுப்பூசி பெறுவதைத் தவிர்ப்பதற்கு தனிப்பட்ட முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார்.

அரசியல்வாதிகள் பொதுமக்களுடன் அதிகம் தொடர்பு கொண்டாலும், அந்த வாய்ப்பை பொதுமக்களிடமிருந்து ஒருவருக்கு வழங்குவது நியாயமானது என்று அவர் மேலும் கூறினார்.

இன்று முன்னதாக, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. ஹரின் பெர்னாண்டோ தனது முடிவை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். 1 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடும் வரை தான் தடுப்பூசி பெற மாட்டேன் என்று கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்