25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
கிழக்கு

நோய்வாய்ப்பட்டு படுத்திருந்த 47 வயது பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கிய 33 வயது காமுகன்!

திருகோணமலை, தெவனிபியவர பகுதியில் 47 வயதுடைய நோயுற்ற பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது இன்று (27) செய்யப்பட்டுள்ளார்.

நோயுற்ற நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதானவரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அயல்வீட்டுக்காரர், கைதானவர் உள்ளிட்ட சிலர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

கைதானவர் அங்கிருந்த தனியாக திரும்பி வந்து, நோயுற்ற நிலையில் இருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்த போது, அவரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment