Pagetamil
இலங்கை

சுட்டவரை தெரிந்தால் தகவல் வழங்குங்கள்!

கடந்த மே மாதம் 20ஆம் திகதி பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரியான லெப்.கேணல் துவான் முத்தலிப் கொலை வழங்கில் கைது செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்ட ஒருவர் இந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட  நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

லங்கா ஏகநாயக்க என்ற 33 வயதுடைய நபர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கிளப் முகாமையாளர் எனவும் அவரது இடது கையின் கீழ் இடது கை மணிக்கட்டில் இருந்து மேல்நோக்கி பறவையின் இறகு கறுப்பு பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும்படிபொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு ~ 071 859 1733
நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு குற்றப் பிரிவு ~ 071 85917335
நிலைய அதிகாரி விசாரணை பிரிவு 1 ~ 071 8596503

இதையும் படியுங்கள்

மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவையை பெற வரி செலுத்துவோர் அடையாள எண் அவசியம்!

Pagetamil

யாழ் பல்கலைக்கழக மாணவன் மீது பகிடிவதை: மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம்!

Pagetamil

‘அம்மா என்னை மன்னித்து விடுங்கள்’: யூடியூப்பர் எடுத்த விபரீத முடிவு!

Pagetamil

பெண் சட்டத்தரணியை விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

Pagetamil

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!