Pagetamil
இலங்கை

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தொடரும் குழப்பம்: மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கேயும் ஒதுங்கினார்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், கட்சியின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்து ஒதுங்கியுள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்ததை தொடர்ந்து, அந்த கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சீ.வீ.கே.சிவஞானத்தின் முடிவும் கட்சிக்கு மேலும் பின்னடைவை கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தமிழ் அரசு கட்சியினால் மட்டக்களப்பில் திட்டமிடப்பட்டுள்ள பெப்ரவரி 4 கரிநாள் ஆர்ப்பாட்டத்திலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என தெரிய வருகிறது.

யாழ் மாநகரசபையின் முதல்வராக்கலாமென குறிப்பிட்டு வித்தியாதரனை தேர்தலில் போட்டியிட அழைத்து வந்து, பின்னர் கைகழுவி விட்டது மற்றும் அவருக்கு தெரியாமல் கட்சி நகர்வுகள் சில மேற்கொள்ளப்பட்டமை போன்ற காரணங்களினாலேயே அவர் அதிருப்தியடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

இதையும் படியுங்கள்

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

வடக்கில் அமையவுள்ள 3 முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் முதலீடு செய்யுங்கள்: புலம்பெயர் தமிழர்களிற்கு யாழ் வணிகர் கழகம் அழைப்பு!

Pagetamil

16 சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுநர் கைது செய்யப்படுவார்

Pagetamil

மஹிந்த காலத்தை மிஞ்சும் அதிகார ஆட்டம்; யாழில் ஜேவிபி அமைச்சரின் தலைகால் புரியாத பேச்சு: முன்னாள் தவிசாளர் நிரோஷ் பதிலடி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!