கடந்த காலத்தில் பல விடயங்களை எந்த அரசும் செயல்படாத செயல் திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி செற்படுத்தினார் அதை வாழ்த்துகிறோம். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான திட்டத்துக்கு 10,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி சிரேஷ்ட உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள ஈ.பி,ஆர்.எல்.எப். கட்சிக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (4) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்தை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் எந்த அரசும் செயல்படாத செயல் திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் முன்கூட்டியே நடைபெறாத முன்னேற்றகரமான செயற்படாத பல விடயங்களை ஜனாதிபதி செயல்படுத்தினார்
அதே போல மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் அரசாங்க அதிபர் தலைமையில் உள்ள திணைக்களங்கள் ஏனைய பிரதேச செயலாளர்கள் பிரதேச செயலகத்தோடு சம்பந்தப்பட்ட உள்ளடக்கிய சகலரும் ஒரு சிறப்பான பணியை ஆற்றியதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிதி இருக்கும் பட்சத்தில் வெள்ளம் பல அனர்த்தங்களை தவிர்க்க முடியும். கிட்டத்தட்ட 10,000 கோடிக்கு மேற்பட்ட நிதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதிர்கால வெள்ள அனர்த்தத்தை தவிர்ப்பதற்காக திட்டமிட்டு ஒதுக்கப்பட்டால் அரைவாசிக்கு மேற்பட்ட வெள்ள அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றன.
சில இடங்களில் வெள்ளம் வந்து வழிந்தோடும் கால கட்டத்தில் சில கிராமங்கள் முழுமையாகத் தாழும். குறிப்பாக செங்கலடி, வெல்லாவெளி வாகரையில் சில இடங்கள் இருக்கின்றன. எனவே தற்போது நாட்டில் இடம்பெற்ற அனர்த்தினையடுத்து கிட்டத்தட்ட 25-26 நாடுகளுக்கு மேற்பட்ட நாடுகள் முந்தியடித்துக்கொண்டு வெள்ள அனர்த்தம் தொடர்பாக தங்களால் இயன்ற பங்களிப்பை செய்வதற்கு முன் வரும் நிலையில் இந்த தருணத்தை பயன்படுத்தி இந்த வெள்ள அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான திட்டங்களை திட்டமிட்டு அதற்கான நிதியை பெறுவதற்கான செயற்பாடுகளை மாவட்ட அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் செய்ய வேண்டும்
கடந்த காலத்தில் சுனாமிக்கு விட்ட பிழையை நாங்கள் விட்டு விடக்கூடாது. சுனாமி வந்ததன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட. அந்த பாலங்கள் அமைத்ததன் ஊடாக பல போக்குவரத்து மிகவும் இலகுவாக செல்வதற்குரிய வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் இன்னும் மேலதிகமாக பல பாலங்களை நிறுவுவதற்கு நாங்கள் திட்டங்களை முன் வைக்கும் பட்சத்தில் அந்த பாலங்களை அமைத்திருக்க முடியும்.
ஆகவே தயவுசெய்து மாவட்டம் எதிர்காலத்தில் வெள்ளத்தை தடுத்து நிறுத்த கூடியவாறு வெளிநாடுகளுக்கு கைகோர்த்து வெளிநாட்டு உதவிகளை பெற்று மாவட்டத்தில் அனர்த்தங்களை நிறுவுவதற்கு பிரதேச செயலகம் உள்ளூராட்சி சபை மன்றங்கள் தோறும் மாவட்ட ரீதியாக ஆராய்ந்து நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாயத் திணைக்களம் ஊடாக சரியான திட்டங்களை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதியை ஒதுக்கீடு செய்வதன் ஊடாக எதிர்கால வெள்ளத்தை தடுக்க முடியும்.
ஒரு இயற்கை அனர்த்தம் நடக்கும் நடக்கப் போகும் என்ற செய்தி பலருக்கு தெரியும். புதிய தொழில்நுட்பம் என்பது குறிப்பிட்ட வாரத்துக்கு முதலிலே சிலதை நாங்கள் தீர்மானிக்க முடியும். அந்த வகை பாராளுமன்றத்தில இயற்கை அனர்த்தம் தொடர்பாக சரியாகக் பிரேரணப்படுத்தி அதற்குரிய நிர்வாக செயல்வடிவம் மேற்கொண்டு இருந்தால் சில விடயங்களை தவிர்க்க முடியும்.
ஆனால் அனர்த்தத்தின் போது இந்த அனர்த்தங்களூடாக அழிக்கப்பட்ட பாதிக்கப்பட்டு உயிரிழந்தவைகளை நாங்கள் ஏனோதானோவென்று பேசுவது நாகரீகமான செயல்கள் அல்ல. அனர்த்தத்தின் போது இந்த அனர்த்தத்தை அபிவிருத்தி செய்வதற்கு அனர்த்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் ஊடாகத்தான் எதிர்கால அனர்த்தத்தை தடுக்க முடியும் என்பதை தயவு செய்து மக்கள் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சில விடயங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தான் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றன. வீண்விரயமற்ற செயற்பாடுகளை நாங்கள் கௌரவிக்கின்றோம் ஜனாதிபதி நேரடியாக எல்லா மாவட்டத்துக்கும் கள தொடர்பு மேற்கொள்ளப்படும் செயல் வடிவங்கள் ஒரு முன்னேற்றகரமான செயல் வடிவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது
இந்த விடயங்களை சரியாக அரசாங்க அதிபர் தொடக்கம் மாவட்ட திணைக்களத்தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் சரியாகப்புரிந்து கொண்டு இந்த அனர்த்தத்திற்கு உதவி செய்வதற்காக வெளிநாடுகள் போட்டி போட்டுக் கொண்டு வரும் இந்த ஏன் பயன்படுத்த முடியாது?
எனவே சரியான திட்டங்களைக் கொடுத்து இங்கே ஆளும் தரப்பைச் சேர்ந்த பிரதிநிகள் இருக்கிறார்கள் அமைப்பாளர்கள் இருக்கிறார்கள் பல உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் அரசாங்க அதிபர் தொடக்கம் திணைக்களத் தலைவர்கள் வரையும் சிறப்பான செயல் வடிவத்தை மக்களுக்கு கொடுத்திருந்தார்கள்.
எனவே ஏன் எங்களால் செய்ய முடியாது என்ற விடயத்தை கவனத்தில் எடுத்து வெளிநாடுகளின் திட்டங்களை சரியாக பயன்படுத்தி குறைந்தது இயற்கை அனர்த்தத்தை தடுப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அந்த திட்டங்களை வழங்குவதற்கும் சரியான திட்டங்களை முன்வைக்குமாறு நான் வினயமாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
-கனகராசா சரவணன்-



