Pagetamil
இலங்கை

யாழில் அதிவேகத்தால் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார்.

ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

வயோதிபர் ஒருவர் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் திடீரென வீதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டுள்ளார். பின்னால் அதிவேகமாக சென்ற இளைஞன், வயோதிபரை மோதுவதை தவிர்க்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து வீதியோர வாய்க்கால் கட்டில் மோதினார்.

தலையில் பலத்த காயமடைந்த இளைஞன், அதிக இரத்தப் போக்கினால் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகம்!

Pagetamil

போர்க்குற்றவாளிகள் மீதான தடையை ஆராய குழு!

Pagetamil

மஹிந்தவின் கூட்டாளிக்கு 16 வருட சிறை!

Pagetamil

மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவையை பெற வரி செலுத்துவோர் அடையாள எண் அவசியம்!

Pagetamil

யாழ் பல்கலைக்கழக மாணவன் மீது பகிடிவதை: மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!