31.3 C
Jaffna
March 23, 2025
Pagetamil
இலங்கை

சாப்பிட மறுத்த தென்னக்கோன்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது சேவை இடைநிறுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கழித்த முதல் நாளில் சாப்பிடக்கூட மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், யாருடனும் பேசவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தேசபந்து தென்னகோனின் பிரதிவாதி சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கையை நிராகரித்த மாத்தறை நீதவான் அருண புத்ததாச, சந்தேகநபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபரை சிறைச்சாலையில் தனியான பாதுகாப்பான இடத்தில் பலத்த பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்குமாறும் நீதவான் சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபரான ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனை சிறைச்சாலை பேருந்தில் தும்பர சிறைச்சாலை அறைக்கு அழைத்துச் சென்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக் களியாட்டத்தில் ஈடுபட்ட 15 யுவதிகளும், 61 இளைஞர்களும் கைது!

Pagetamil

‘தமிழரசுக் கட்சியிலுள்ள ராஜபக்ச அவதாரம் இவர்’: சாணக்கியனை வறுத்தெடுத்த பிமல்!

Pagetamil

இலஞ்சம் வாங்கிய 3 பேர் சொகுசு ஹோட்டலில் கைது!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

கருணா- பிள்ளையான் மீண்டும் இணைந்தனர்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!