இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் இல்லத்தில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 உள்நாட்டு மது போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சோதனை நடவடிக்கையில் இரண்டு மொபைல் போன்களும் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.
“இந்த தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களைக் கண்டறிய முடியும்” என்று அமைச்சர் கூறினார்.