பைடன் நிர்வாகம் ஒரு வருடம் முயன்றும் முடியாததை ட்ரம்ப் தரப்பு ஒரு சந்திப்பில் சாத்தியமாக்கியது எப்படி?

Date:

இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு வருடமாக முயன்றும் முடியாததை, புதிதாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் தரப்பினர் ஒரு சந்திப்பிலேயே சாத்தியமாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்புடன் பேச்சு நடத்த கடும் நிபந்தனைகளுடன், கறார் போக்கை கடைப்பிடித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, ட்ரம்ப்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் வார இறுதியில் சந்தித்ததை தொடர்ந்து, ஒப்பந்தம் சாத்தியமாகும் நிலைமையை எட்டியுள்ளது.

பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய இரண்டு அரபு அதிகாரிகiள மேற்கோளிட்டு,  டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் ஊடகம் இதனை தெரிவித்துள்ளது.

ஜனவரி 20 ஆம் திகதி ட்டிரம்பின் பதவியேற்புக்கு முன்னர் மத்தியஸ்தர்கள் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கும்போது, ​​பணயக்கைதிகள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க விட்காஃப் கடந்த ஒரு வாரமாக தோஹாவில் உள்ளார். சனிக்கிழமை, பிரதமரின் ஜெருசலேம் அலுவலகத்தில் நெதன்யாகுவுடன் ஒரு சந்திப்பிற்காக விட்காஃப் இஸ்ரேலுக்கு பறந்தார்.

சந்திப்பின் போது, ​​ஒரு ஒப்பந்தத்திற்குத் தேவையான முக்கிய சமரசங்களை ஏற்றுக்கொள்ளுமாறு விட்காஃப் நெதன்யாகுவை வலியுறுத்தினார்.

திங்கட்கிழமை இரவு – ஜெருசலேம் சந்திப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு – இஸ்ரேலிய மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுக்கள் மத்தியஸ்தர்களுக்கு பணயக்கைதிகள் ஒப்பந்த திட்டத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டதாக அறிவித்ததாக இரு அதிகாரிகளும் தெரிவித்தனர். ஒப்பந்தத்தை செயல்படுத்துவது தொடர்பான விவரங்களை இறுதி செய்ய இரு தரப்பினரும் பணியாற்றி வருகின்றனர்.

இன்னும் இறுதி செய்யப்படாத முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறுவதற்கான சரியான அளவுருக்கள், மத்தியஸ்தர்கள் இன்னும் இஸ்ரேலிடமிருந்து ஒரு வரைபடத்திற்காக காத்திருக்கிறார்கள் என்று அரபு அதிகாரிகள் தெரிவித்தனர்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வரும் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகியவற்றின் கூட்டு அறிக்கையின் வடிவத்தில் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்படும் என்று இரு அதிகாரிகளும் ஊகித்தனர்.

செவ்வாய்க்கிழமை முன்னதாக, மீதமுள்ள 98 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகவும், ஹமாஸ் இன்னும் அதைச் செய்யவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். எனினும், அரபு அதிகாரிகள் அதை நிராகரித்தனர். பேச்சு இதுவரை தேக்கமடைந்திருந்ததற்கு இஸ்ரேலும் காரணம் என்றனர்.

எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தம் 3 கட்டங்களை கொண்டிருக்கும் என கருதப்படுகிறது.

42 நாள் முதல் கட்டத்தில், மீதமுள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட பணயக்கைதிகளில் 33 பேர் சுமார் 1,000 பாலஸ்தீன பாதுகாப்பு கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேல் காசாவில் இருந்து ஓரளவு விலகும், அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் 600 லொறிகள் மனிதாபிமான உதவிகளை காசா பகுதிக்குள் நுழைய உதவும்.

இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உயிருள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, விரோதங்களுக்கு நிரந்தர முடிவு அறிவிக்கப்படும். மூன்றாம் கட்டத்தில் ஹமாஸால் இன்னும் வைத்திருக்கும் உடல்கள் விடுவிக்கப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...

அமெரிக்க தடையை கடந்து சென்ற ஈரானின் சூப்பர் டாங்கர்

போருக்கு மத்தியில் இப்பகுதியில் நிலவும் அமெரிக்கத் தடைகள் மற்றும் இராணுவ அழுத்தத்திற்கு...

ஈரான் மீதான முற்றுகை தொடர்ந்தால் செங்கடல் வர்த்தகத்தை முடக்குவோம்!

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், செங்கடல், வளைகுடா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்