திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்

Date:

திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) அதிகாலை 4.00மணியளவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களினால் திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான நிலையில் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கண்டுபிடிக்கப்பட்ட குறித்த ஆளில்லா விமானம் படகில் கட்டப்பட்டு கரைக்கு இழுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மீன் பிடிக்க சென்ற மீனவர், கடலில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த விமானத்தினை தாம் அவதானித்ததாகவும் அதனைத்தொடர்ந்து அதனை தனது படகில் கட்டி கரைக்கு இழுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான குறித்த ஆளில்லா விமானம் மோட்டாரின் மூலம் இயக்கப்படும் ஒன்றாக காணப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்