நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Date:

நடைபயிற்சிக்கு தனியாக சென்றதால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கொடுத்தவர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் நடைபயிற்சிக்கு தனியாக சென்றார். இதனால் அந்தப் பெண்ணின் 31-வயது கணவர் கோபம் அடைந்தார். இத்தகவலை மாமனாரிடம் போனில் தெரிவித்த கணவர் , முத்தலாக் மூலம் திருமணத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவரது மனைவி போலீஸில் புகார் செய்தார். முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பெண்ணின் கணவர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம், மிரட்டல் குற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.60 இலட்சம் செலவாகிறது!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான...

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்