31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் வைத்தியரின் மனைவி குத்திக்கொலை

திருகோணமலையில் பிரபல தனியார் மருத்துவமனை உரிமையாளரின் மனைவி இன்று (05) அதிகாலை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை தனவந்தரி வைத்தியசாலை உரிமையாளரின் மனைவியான ஏஞ்சலி சுமேத்ரா (63) எனவும் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இன்று (05) அதிகாலை வருகை தந்து வைத்தியசாலை கட்டிடத் தொகுதியில் உள்ள மூன்றாவது மாடியில் தனது அறையை திறப்பதற்காக சென்றபோது அறைக்குப் பக்கத்தில் இருந்த மைத்துனரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கத்திக்குத்தை மேற்கொண்டதாக கூறப்படும் வைத்தியர் கணேபாகு என்பவரின் சகோதரரான 56 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

தாயை கொன்ற மகன்

Pagetamil

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!