வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இருவர்

Date:

மிரிஹான, ஜூபிலி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் பல நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியை சேர்ந்த அயலவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (08) வீட்டிற்குச் சென்றபோது, ​​வீட்டின் அறையொன்றில் உள்ள படுக்கையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டது.

வீட்டின் சமையலறை மாடியில் பெண் ஒருவரின் நிர்வாண சடலமும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

80 வயதுடைய முதியவரும், 96 வயதுடைய பெண்ணுமே உயிரிழந்துள்ளனர்.

இது குற்றமா அல்லது இயற்கை மரணமா என மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்